ரயில் வருவதை அறியாமல் தண்டவாளத்தில் நடந்து சென்ற மகள்களை தண்டவாளத்தை விட்டு வெளியே தள்ளி, தாய் ரயிலில் சிக்கி உயிரிழப்பு

0 2632

சென்னை கோட்டை ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, மின்சார ரயில் வருவதை அறியாமல் சென்ற  மகள்களை தண்டவாளத்தில் இருந்து தள்ளி விட்டு காப்பாற்றிய தாயார் ரயில் மோதி உயிரிழந்தார்.

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் சித்ரா, தனது இரண்டு மகள்களுடன் தி நகரில் உள்ள சரவணா ஸ்டோரில் பொருட்களை  வாங்கி கொண்டு கோட்டை ரெயில் நிலையம் சென்றுள்ளார்.

பின்னர்  வேளச்சேரி செல்லும் பறக்கும் ரெயிலில் செல்வதற்காக மகள்களுடன்  தண்ட வாளத்தை கடந்துள்ளார்.

அப்போது ரயில் வருவதை கண்ட சித்ரா இரண்டு மகள்களையும் ஓடி சென்று தண்டவாளத்தில இருந்து தள்ளி விட்டு காப்பற்றினார் ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் ரயில் சித்ரா மீது மோதியதால்  அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments