அமைச்சர் மா.சு.,வை மாரத்தான் சுப்பிரமணியன் என்று பாராட்டிய முதலமைச்சர்.. !!

0 1431

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற பன்னாட்டு மாரத்தான் ஓட்டம், கின்னஸில் இடம் பிடித்தது.

சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் இருந்து தொடங்கிய மாரத்தானில் 73 ஆயிரத்து 206 பேர் பங்கேற்றனர்.

21 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் என்ற மூன்று பிரிவுகளாக நடந்த இந்த மாரத்தானில் இத்தனை பேர் இடம்பெற்றதே சாதனைக்கு காரணம்.

மாரத்தான் பதிவு கட்டணமாக வசூலிக்கப்பட்ட, 3 கோடியே 42 லட்சம் ரூபாயை, ராயப்பேட்டை அரசு மருந்துவமனையின் புற்றுநோய் பிரிவிற்கான புதியக் கட்டடம் கட்டுவதற்கு நன்கொடையாக முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போட்டியை நடத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியனை, மாரத்தான் சுப்பிரமணியன் என பாராட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments