திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் குளிக்க சென்று நீரில் மூழ்கிய 2 கல்லூரி மாணவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு; மற்றொருவரை தேடும் பணி தீவிரம்

0 3424

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் போலீசின் எச்சரிக்கையையும் மீறி குளிக்க சென்ற 2 மாணவர்கள் ஆற்றில் மூழ்கியதில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

திருச்சி பிஷப் ஹூபர் கல்லூரியைச் சேர்ந்த 14 மாணவர்கள் விடுமுறையை ஒட்டி முக்கொம்பு ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் எச்சரித்தும் கேட்காமல் ஆற்றில் இறங்கியவர்கள், சுழலில் சிக்கி கூச்சலிட்டுள்ளனர். 12 பேர் மீட்கப்பட்ட நிலையில், இருவர் மட்டும் மாயமாகினர்.

அவர்களில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் மட்டும் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மற்றொருவரை தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments