குல்காமின் ஹலான் வனப்பகுதியில் துப்பாக்கிச் சண்டையில் 3 ராணுவ வீரர்கள் வீர மரணம்; தீவிர தேடுதல் வேட்டை

0 1346


ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை கண்டுபிடிக்க ட்ரோன்கள் ஏவப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு பாராசூட் சிறப்புப்படை வீரர்கள் விரைந்துள்ளனர்.

ஹலான் வனப் பகுதியின் உயரமான இடங்களில் 3 முதல் 4 தீவிரவாதிகள் அடங்கிய குழு பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்புப் படையினர் அங்கு தேடுதல் பணி மேற்கொண்டனர். அப்போது வீரர்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதால், வீரர்கள் எதிர் தாக்குதலை தொடங்கினர்.

இந்த சண்டையில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் ஹலான் வனப்பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை கண்டுபிடிக்க ட்ரோன்களை பாதுகாப்புப் படை ஏவியுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு, பிணைக் கைதிகள் மீட்பு உள்ளிட்டவற்றில் திறமை வாய்ந்த பாராசூட் சிறப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments