மணிப்பூர் தொடர்பாக பிரதமர் தான் பேச வேண்டும் என சட்ட விதி இல்லை : நிர்மலா சீதாராமன்

0 1398

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் தான் பேச வேண்டும் என எந்த சட்ட விதியும் நாடாளுமன்றத்தில் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் பேட்டியளித்த அவர், நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய விஷயங்களை எதிர்க்கட்சியினர் வெளியே பேசுவதாக குற்றஞ்சாட்டினார்.

முன்னதாக, ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளுக்கு நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கனிமொழி எம்.பி.யை தமக்கு அருகில் வரவழைத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை அவருடன் இணைந்து நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments