அமைச்சர் மூர்த்தி செய்யாத ஊழலே கிடையாது - அண்ணாமலை பேச்சு

0 3942

மதுரையைச் சேர்ந்த அமைச்சர் மூர்த்தி செய்யாத ஊழலே கிடையாது என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

மதுரை ஒத்தக்கடை பகுதியில் பேசிய அவர், டிரான்ஸ்ஃபருக்கும் காசு, டிரான்ஸ்ஃபரை நிறுத்தி வைக்கவும் காசு, சஸ்பெண்ட் செய்தாலும் காசு, சஸ்பென்ஷனை நிறுத்தி வைத்தாலும் காசு என அமைச்சர் மூர்த்தியின் துறையில் ஊழல் நடந்து கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னதாக, மதுரையில் ஒத்தக்கடை நரசிங்க பெருமாள் கோயிலில் 9-வது நடைபயணத்தை துவங்கிய அண்ணாமலையுடன் பா.ஜ.க.வினர் புகார் பெட்டியை ஏந்திய படி யாத்திரை சென்றனர். ஆர்வத்துடன் வந்தவர்களுடன் அண்ணாமலை செல்ஃபி எடுத்துக் கொண்டார். பா.ஜ.க. தொண்டர்கள் அண்ணாமலை மீது பூக்கள் தூவி வரவேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments