முறை தவறிய உறவை முறித்த பிறகும் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் கொழுந்தனாரை மகனுடன் சேர்ந்து கொலை செய்த பெண் கைது..!

0 2891

முறை தவறிய உறவைத் தவிர்க்க முடிவு செய்தும், தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் செஞ்சி அருகே  கொழுந்தனாரை தனது மகனுடன் சேர்ந்து பெண் ஒருவர் அடித்துக் கொன்றது தெரியவந்துள்ளது.

பத்மாவதி என்ற அந்த பெண்ணின் கணவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பத்மாவதியின் கொழுந்தனார் சுரேஷும் மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்த நிலையில், இருவரிடையே முறை தவறிய உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் பத்மாவதி உறவை முறித்துக் கொண்டதாகவும், இருந்தும் விடாமல் சுரேஷ் தொல்லை செய்ததால், கடந்த மாதம் 29ஆம் தேதி, அவரை பத்மாவதியும், அவரது 17 வயது மகனும் சேர்ந்து, தென்னை மட்டையால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதில் மயங்கி விழுந்த சுரேஷை, மது போதையால் மயங்கி விழுந்ததாக, வேலூர் அரசுக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் கடந்த புதன் கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், சுரேஷின் மனைவி கொடுத்தப் புகாரின்பேரில், பத்மாவதியையும், அவரது மகனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments