காஷ்மீரில் பாதுகாப்புப் படைக்கும், தீவிரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 வீரர்கள் உயிரிழப்பு..!

0 3127

ஜம்மு காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படைக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஹலான் வனப் பகுதியின் உயரமான இடங்களில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், பாதுகாப்புப் படையினர் அங்கு தேடுதல் பணி மேற்கொண்டனர்.

அப்போது வீரர்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதால், வீரர்கள் எதிர் தாக்குதலை தொடங்கினர். இந்த சண்டையில் 3 வீரர்கள் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட நிலையில், அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதையடுத்து, கூடுதல் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அவர்களுடன் குல்காம் போலீசாரும் இணைந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments