எதிர்க்கட்சியினரின் அடுத்த கூட்டம் ஆக.31 செப்.1 தேதிகளில் நடைபெறுகிறது..!

0 1189

26 எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்திற்கான பணிகளை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசும் ஒருங்கிணைத்து வருகின்றன.

இம்மாதம் 25, 26 தேதிகளில் நடைபெறுவதாக இருந்த இக்கூட்டம் தலைவர்களுக்கு இதரப் பணிகள் இருந்ததால் ஒத்தி வைக்கப்பட்டது. தேர்தலுக்கு முன்பு இன்னும் ஆறேழு கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ள இந்தியா கூட்டமைப்பினர் ஒரு புதிய குழுவை அறிவித்துள்ளனர். காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 11 நபர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு ஒன்றையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments