தாய்லாந்தில் டிரக் மீது ரயில் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழப்பு..!

0 1142

தாய்லாந்தில் டிரக் மீது ரயில் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

சாச்சோயங்சாவோ மாகாணத்தில் அதிகாலை நேரத்தில் பிக் அப் டிரக் ஒன்று தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ரயில், டிரக் மீது மோதியது.

இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 8 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த இடம் அங்கீகரிக்கப்படாத கிராசிங் என்பதால் சிக்னல் ஏதும் வைக்கப்படவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments