அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனங்களைத் திருடி அவற்றை பிரித்து விற்ற மெக்கானிக் உள்பட 2பேர் கைது

0 3136

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருபதுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களைத் திருடி அவற்றை பிரித்து விற்ற மெக்கானிக் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அவர் எப்போதும் கையில் வைத்திருக்கும் ஒருபையை வைத்து போலீசார் அவரை அடையாளம் கண்டுபிடித்தனர்.

அரசு மருத்துவமனையின் பார்க்கிங்கில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு நபர் மாஸ்க் அணிந்தபடி இருசக்கர வாகனத்தை பார்த்து கொண்டிருந்த போது அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிப்பட்ட அந்த நபர்  செங்குன்றம் பகுதியை சேர்ந்த முருகன் என்பது தெரியவந்தது.

மருத்துவமனை,பாரிமுனை, சவுகார்ப்பேட்டை போன்ற பல இடங்களிலும் வாகனத்திருட்டில் ஈடுபட்டு வந்ததை முருகன் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரிடம் வாகனத்தின் உதிரிபாகங்களை வாங்கியதற்காக தங்கபாண்டியன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments