அண்ணாமலைக்கு தொண்டர்கள் ஜல்லிக்கட்டு காளைகள், 25 சீர்வரிசைகளுடன் உற்சாக வரவேற்பு

0 3000

மதுரை மாவட்டம் மேலூரில் நடைபயணம் மேற்கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஜல்லிக்கட்டு காளைகள், 25 வகையான சீர்வரிசைகளுடன் என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வரும் அண்ணாமலை, இன்று காலை மேலூர் அரசு கலைக்கல்லூரி அருகிலில் தொண்டர்கள் புடைசூழ யாத்திரையை தொடங்கினார்.

அவரை வரவேற்பதற்காக 10க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை தொண்டர்கள் அழைத்து வந்திருந்தனர். அண்ணாமலை மாலை போட வந்த போது திடீரென ஒரு காளை தடுப்புக்கயிற்றை தாண்டி எகிறி துள்ளியது.

உடனே அவர் காளையின் நெற்றியில் தடவிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். தொடர்ந்து, சந்தைப்பேட்டை பெரிய கடை வீதி, சிவன் கோவில், அழகர் கோவில் சாலை வழியாக நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலைக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments