வங்கி டெபாசிட் இயந்திரத்தில் பணம் செலுத்த வந்தபோது பின்தொடர்ந்து கொள்ளை 2 பேர் கைது

0 1729

சென்னை, இராயபுரத்தில் தனியார் வங்கி டெபாசிட் இயந்திரத்தில் பணத்தை டெபாசிட் செய்ய வந்தவரை பின்தொடர்ந்து வந்து கத்தியால் தாக்கி 8 லட்சம் ரூபாய் பணத்தை பறித்து சென்ற வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 31ஆம் தேதி முகமது தமீம் என்பவர் பணத்தை டெபாசிட் செய்ய, தனது நண்பருடன் டூவீலரில் எம்.எம். கோயில் தெருவில் வந்து கொண்டிருந்தபோது, இரண்டு டூவீலர்களில் 5 பேராக பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை கத்தியால் தாக்கியுள்ளனர்.

ஹெல்மெட் மீது கத்தி பட்டதால், முகமது தமீம் நிலைதடுமாறி கீழே விழுந்தபோது, பணத்தை பறித்து சென்றுள்ளனர். சிசிடிவி பதிவுகளை வைத்து வெங்கடேஷ், கர்ணா ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, மேலும் மூன்று பேரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments