புதுச்சேரியில் தியோதர் டிராஃபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி

0 2873

புதுச்சேரியில் தியோதர் டிராஃபி கிரிக்கெட் போட்டி தொடரில் தெற்கு மண்டல அணி 23 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்றது. கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் துத்திப்பட்டு சீகெம் மைதானத்தில் இரவு-பகல் ஆட்டமாக நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 6 அணிகள் பங்கேற்றன.

இறுதிப் போட்டியில் கிழக்கு மண்டல அணியை எதிர் கொண்ட தெற்கு அணி, 328 ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய கிழக்கு மண்டல அணி, 46 புள்ளி ஒரு ஓவரில் 283 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments