கொலம்பியாவில் 60 ஆண்டு உள்நாட்டு சண்டையை 6 மாதம் நிறுத்த ஒப்பந்தம்

0 1342

60 ஆண்டுகளில் நான்கரை லட்சம் பேரை பலி கொண்ட கொலம்பிய அரசுக்கும், அந்நாட்டில் இயங்கிவரும் தீவிர இடதுசாரி போராளிக் குழுவிற்கும் இடையேயான சண்டையை, 6 மாதம் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அறுபதுகளில் தீவிர இடதுசாரி சிந்தனையாளர்களால் தொடங்கப்பட்ட நேஷனல் லிபரேஷன் ஆர்மி ((National Liberation Army)) என்ற போராளிக் குழுவிற்கும், கொலம்பிய அரசுக்கும், போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.

இதில் இதுவரை 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சண்டைக்கு முடிவு கட்ட கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ விடுத்த அழைப்பை ஏற்று இடைக்காலப் போர் நிறுத்தத்திற்கு போராளிக்குழு ஒப்புக்கொண்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments