இஸ்ரேலிடம் இருந்து ஸ்பைக் ஏவுகணைகளை வாங்கியது இந்திய விமானப்படை.. !!

0 1120

மறைத்து வைக்கப்பட்டு இருக்கும் எதிரிகளின் ராணுவ பீரங்கிகள் உள்ளிட்டவற்றை தாக்கி அழிக்கும் ஸ்பைக் ஏவுகணைகளை இஸ்ரேலிடம் இருந்து இந்திய விமானப்படை வாங்கியுள்ளது.

சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் திறந்த கொண்ட இந்த ஏவுகணைகளை பயன்படுத்தி விரைவில் சோதனை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

மலைப்பகுதிகளின் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் எதிரிகளின் இலக்குகள் மீதும் ஸ்பைக் ஏவுகணையால் தாக்குதல் நடத்த முடியும்.

கடந்த 2 இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் அத்துமீறி பீரங்கிகளுடன் படைகளை குவித்த போதே, ஸ்பைக் ஏவுகணைகளை வாங்க இந்திய விமானப்படை ஆர்வம் காட்டியது.

தற்போது குறைந்த எண்ணிக்கையில் ஏவுகணைகள் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், விரைவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இவற்றை அதிக அளவில் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments