மேகதாதுவில் நில அளவீட்டை தொடங்கியதால் அணையை கட்டிவிட முடியாது.. கர்நாடக அரசின் செயல்பாடு குறித்து தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கருத்து

0 1492

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகம் நில அளவீடுப் பணிகளை தொடங்கிவிட்ட நிலையில், அதுதொடர்பாக வரும் 11ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் குழு கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் முறையிடுவார்கள் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம் சேவூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நில அளவீட்டை தொடங்கியதால் மட்டும் அணையைக் கட்டி விட முடியாது என்றார்.

கர்நாடகத்தின் நடவடிக்கையைப் பொருத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடும் என்று குறிப்பிட்டார். மேலும், கர்நாடக அரசு, ஏதோ புதிதாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைப் போல நடந்துகொள்வதாக துரைமுருகன் விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments