சாலையோரம் நின்றிருந்த சி.ஆர்.சரஸ்வதியை வாகனத்தை விட்டு இறங்கிச்சென்று நலம் விசாரித்த முதல்வர்.. !!

0 15244

சென்னை அசோக் நகரில், மழைநீர் வடிகால் ஆய்வின்போது, தனது வாகனத்தில் இருந்து இறங்கிச் சென்று, அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதியை சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது கோரிக்கையையும் கேட்டறிந்தார்.

அசோக் நகர் 4 வது அவென்யூவில் மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்துவிட்டு முதலமைச்சர் புறப்பட்டார்.

அப்போது, சி.ஆர்.சரஸ்வதி, தனது வீட்டின் அருகே சாலையில் நிற்பதைக் கண்ட முதலமைச்சர், வாகனத்தை விட்டு இறங்கிச் சென்று, நல்லா இருக்கீங்களா? என நலம் விசாரித்தார்.

அப்போது, அசோக் நகர் பகுதியில் மழைக் காலங்களில் வெள்ளம் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.ஆர்.சரஸ்வதி கோரிக்கை வைத்தார்.

அதற்கு, நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சரும் உறுதி அளித்திருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments