சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் படுகாயம்..!

0 2101

சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.

செங்கல்பட்டில் உள்ள ஐ.டி கம்பெனியில் பணிபுரியும் ஆந்திராவைச் சேர்ந்த காருண்யா என்ற இளம்பெண், நேற்றிரவு தனது நண்பர்களுடன் கேரளாவுக்கு சுற்றுலா செல்ல திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயிலில் ஏறியுள்ளார்.

3ம் வகுப்பு ஏ.சி கோச்சில் ஏறிய காருண்யா, தனது நண்பரான ராஜேஷ் என்பவருடன், ரயிலின் படிக்கெட்டில் நின்று பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ரயில் புறப்பட்ட போது திடீரென காருண்யா நிலைதடுமாறி கீழே விழுந்த போது அவரை காப்பாற்ற முயன்ற ராஜேஷும் கீழே விழுந்தார்.

நடைமேடையில் இருந்த பயணிகள் உடனடியாக ஓடி வந்து ராஜேஷை காப்பாற்றிய நிலையில், ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கி காருண்யா சிறுது தூரம் இழுத்துச் செல்லப்பட்டார்.

பின், ரயில் நிறுத்தப்பட்டு ரயில்வே போலீசார் உதவியுடன் காருண்யா மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்தில் காருண்யாவின் கால் மற்றும் இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments