அடிப்படை வசதிகளை செய்துத் தர நடவடிக்கை எடுக்கவில்லை.. தி.மு.க. நகராட்சித் தலைவரை மாற்றக் கோரி சொந்தக்கட்சி கவுன்சிலர்களே மனு.. !!

0 1683

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் தி.மு.க.வைச் சேர்ந்த நகராட்சி தலைவரை மாற்றக் கோரி சொந்தக்கட்சி கவுன்சிலர்களே மனு அளித்தனர்.

27 வார்டுகளைக் கொண்ட நகராட்சியில் தி.மு.கவைச் சேர்ந்த முனவர் ஜான், நகர்மன்றத் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

பதவியேற்றது முதலே வார்டுகளுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் கூறி 18 தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 20 உறுப்பினர்கள் தனித்தனியாக, நகராட்சி ஆணையர் பால்ராஜிடம் கடிதம் வழங்கினர்.

இதுபற்றி கருத்து கூறிய நகராட்சித் தலைவர் முனவர் ஜான், தனக்கு எதிராக நகராட்சி துணைத் தலைவர், கவுன்சிலர்களை தூண்டி விடுவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments