சாலையோரங்களில் உணவகம் நடத்த மூன்றாயிரம் ரூபாய் மாமூல்?.. கவுன்சிலரை மடக்கி கடும் வாக்குவாதம் செய்த வியாபாரி!

0 4855

விருத்தாசலத்தில் ஜங்ஷன் ரோடு, பேருந்து நிலையப் பகுதிகளில் சாலையோர உணவகங்களை நடத்தி வருபவர்களிடம் கவுன்சிலர் ஒருவர் மாமூல் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

ஐந்தாவது வார்டு உறுப்பினராக இருக்கும் ராஜேந்திரன், உணவகம் நடத்த மூன்றாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த வியாபாரி ஒருவர், ராஜேந்திரனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை ஒருவர் வீடியோ எடுப்பதைக் கண்டு சுதாரித்த கவுன்சிலர், நான் எப்போது பணம் கேட்டேன் என்று நழுவியதாக குற்றஞ் சாட்டப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments