சுருக்குமடி வலையை முற்றிலும் தடை செய்ய கோரி மயிலாடுதுறையில் மீனவர்கள் 2வது நாளாக போராட்டம்.. !!

0 962

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கடலில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாக சந்திரபாடி மீனவர்கள் மூன்று பேரையும் மீன்களை ஏற்றி வந்த பைபர் படகையும், தரங்கம்பாடி மீனவர்கள் சிறைப்பிடித்து துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் அறிந்து வந்த கடலோர காவல் படை மற்றும் பொறையார் போலீசார் மீனவ பஞ்சாயத்தார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சந்திரபாடி மீனவர்களை பொறையார் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு வந்த சந்திரபாடி மீனவர்கள் தரங்கம்பாடி மீனவர்களின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து தங்கள் படகை தங்களிடம் ஒப்படைக்க கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில்,சுருக்குமடி வலையை முற்றிலும் தடை செய்யக்கோரி மயிலாடுதுறையில் 21 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர்வது எனவும், ஆறு மாவட்ட மீனவர்களை ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டம் நடத்தவும் நேற்று தரங்கம்பாடியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments