இந்தியாவுடன் போர் என்பது இனி தேவையற்றது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெர்பாஸ் ஷெரீப் கருத்து..!

0 35102

இந்தியாவுடன் போர் என்பது இனி தேவையற்றது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெர்பாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

காஷ்மீர் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயார் என்றும் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானின் எல்லைத் தாண்டிய தீவிரவாதம் காரணமாக இந்தியா பாகிஸ்தான் இடையிலான அரசாங்க உறவுகள் விரிசல் அடைந்து விட்டன.இச்சூழலில் இந்தியாவுடன் போர் நடத்துவது தேவையற்றது என்று ஷெரீப் கூறியுள்ளார்.

ஆனால் ஜம்முகாஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும் திட்டவட்டமாக இந்தியா தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் தீவிரவாதத்தை முழுவதுமாக கைவிடும் வரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்றும் இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments