மணிப்பூரில் கள ஆய்வு செய்த 21எம்பிக்கள் இன்று குடியரசுத் தலைவருடன் சந்திப்பு..!

0 1296

மணிப்பூரில் இரண்டு நாட்கள் கள ஆய்வு மேற்கொண்ட 21 எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து தங்கள் அறிக்கையை அளிக்க உள்ளனர்.

அப்போது மணிப்பூர் தவிர நாடாளுமன்ற முடக்கம், ஹரியானா கலவரம் உள்ளிட்ட இதரப் பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் குடியரசுத் தலைவரிடம் முறையிட இருப்பதாகக் கூறப்படுகிறது.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமர் மோடி நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்றால் தாங்களும் விவாதிக்கத் தயார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments