நம்பி வாக்களித்தவர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்று தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்டு அழுத கவுன்சிலர்..!!

0 1674

நம்பி வாக்களித்த மக்களுக்கு தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறி ஆந்திராவில் கவுன்சிலர் ஒருவர் தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்டார்.

நர்சினப்பட்டி நகராட்சியில் நேற்று நகரசபைக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்றுப் பேசிய கவுன்சிலர் ராமராஜூ, தான் பதவியேற்று 31 மாதங்கள் ஆகியும், அரசுப் போதிய நிதியை ஒதுக்காததால், தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு குடிநீர், கழிவுநீர் வடிகால், சாலை வசதி என்று எந்தவொரு அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க முடியவில்லை என்று ஆதங்கம் அடைந்தார்.

பின்னர் அழுதுகொண்டே கவுன்சிலர் ராமராஜூ கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments