ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் கிளை மேலாளரை கடத்திச்சென்ற கும்பல்.. 7 மணி நேரத்தில் கைது செய்த போலீசார்..!

0 2423

மோசடி புகாரில் சிக்கிய ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் சென்னை அமைந்தகரை கிளை மேலாளர் செந்தில்குமார் என்பவரை கடத்திச் சென்ற கும்பலை, புகார் கொடுத்த 7 மணி நேரத்தில் கோயம்பேடு போலீசார் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து கடந்த 2 மாதங்களாக தினசரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்தார். அவரை, ஜூலை 28ஆம் தேதி மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்றனர்.

பட்டப்பகலில் வந்து செந்தில்குமாரை கடத்திச் சென்றவர்களிடம் அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியபோது, பெண் விவகாரத்தில் அவரை அழைத்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments