சாலை வளைவில் அதிவேகமாகத் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்த கார்.. செண்டர் மீடியனில் ஏறி லாரி மீது மோதியதில் 4 பேர் பலி..!

0 1648

மதுரை மாவட்டம் மையிட்டான்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்று வளைவில் கட்டுப்பாட்டை இழந்த கார், செண்டர் மீடியனில் ஏறி, எதிர் திசையில் சென்ற சரக்கு லாரி மீது மோதியதில் 4 பேர் பலியாகினர்.

விரகனூரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர், கண்ட்டெய்னர் லாரியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு விருதுநகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். மையிட்டான்பட்டி அருகே கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கி அதிவேகமாகச் சென்ற மஹிந்திரா கார் ஒன்று, வளைவில் கட்டுப்பாட்டை இழந்து, செண்டர் மீடியனில் ஏறி, மறுபுறம் எதிர்திசையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது.

இதில் இரண்டு வாகனங்களுமே கவிழ்ந்து முற்றிலும் சேதமடைந்தன. லாரியை ஓட்டிச் சென்ற செல்வகுமாரும் காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments