தாய்லாந்தில் வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 பேர் பலி.. !!

0 1060

தாய்லாந்தில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

தெற்கு மாகாணமான நராதிவாட் என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுக் கிடங்கில் சனிக்கிழமையன்று வெடிவிபத்து ஏற்பட்டது.

வெல்டிங் பட்டறையில் ஏற்பட்ட நெருப்பு காரணமாக இந்த விபத்து நேரிட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 121 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெடிவிபத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. இதன் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணிகள் நடந்து வருவதாகத் தெரிவித்த அதிகாரிகள், கிடக்கின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments