செல்ஃபிக்காக பாறையில் ஏறிய போது கால் வழுக்கி ஆற்றுக்குள் விழுந்து புதுமண தம்பதியர் பலி.. !!

0 6360

கேரளாவில், திருமணமாகி 5 நாட்களில் விருந்திற்காக உறவினர் வீட்டிற்குச் சென்ற புதுமண தம்பதியர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த சித்திக், நவ்பி தம்பதி  விருந்துக்காக திருவனந்தபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது, அருகிலுள்ள பள்ளிக்கல் ஆற்றுக்கு சென்ற தம்பதியர் பாறை ஒன்றின் மீதேறி செல்ஃபி எடுக்க முயன்ற போது கால் வழுக்கி ஆற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.

தூரத்திலிருந்து இதனைப் பார்த்துக் கொண்டிருந்த உறவினரான அன்சில் என்ற இளைஞர் அவர்களை காப்பாற்ற ஆற்றுக்குள் குதித்துள்ளார். எனினும், 3 பேரும் தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலங்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments