போலந்தை தாக்க பெலாரசில் முகாமிட்டுள்ளனவா வாக்னர் படைகள்? அச்சுறுத்தல் நீடிப்பதாக போலந்து பிரதமர் அறிவிப்பு..!

0 1902

ரஷ்யாவால் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்ட வாக்னர் படையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் தங்கள் நாட்டு எல்லையை நெருங்க முயற்சிப்பதாக போலந்து பிரதமர் மோராவைக்கி தெரிவித்துள்ளார்.

போலந்து மீது தாக்குதல் நடத்தும் திட்டமாக இது இருக்கலாம் என்றும் அவர் கூறினார். தற்போது இந்தப் படைவீரர்கள் பெலாரஸ் நாட்டின் குரோட்னோவில் முகாமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பெலாரசின் எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் போல வேடமிட்டு வாக்னர் வீரர்கள் போலந்துக்குள் ஊடுருவ முயற்சிக்கலாம் என்றும் போலந்து பிரதமர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments