குழந்தை இல்லைன்னா பொண்டாட்டிய அடிப்பீங்களா..? வீடியோ வெளியிட்டு பெண் விபரீதம்..!

0 2910

புதுச்சேரியில் திருமணமாகி 4 ஆண்டுகளாக குழந்தை இல்லை என்று கணவன் தாக்கியதால் மனம் உடைந்த பெண் ஒருவர், கணவன் வீட்டில் தனக்கு நடந்த கொடுமைகளை வீடியோவாக செல்போனில் பதிவு செய்து வைத்து விட்டு உயிரை மாய்த்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தை இன்மையால் கணவன் வீட்டில் நடந்த கொடுமைகளை கண்ணீர் மல்க கூறும் இவர் தான் விபரீத முடிவை தேடிக் கொண்ட மோனிகா..!

புதுச்சேரி, திருக்கனூர் ரோஜா நகர் கே.மனவேலியை சேர்ந்தவர்கள் அரவிந்த - மோனிகா தம்பதியினர் . தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த இவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என்று கூறப்படுகின்றது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அவ்வபோது சண்டை வந்ததாக கூறப்படுகிறது,

இந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதி மாலை மோனிகா தனது தாய் உண்ணாமலையிடம் தனது கணவர்க்கும் தனக்கும் இடையே குழந்தை இன்மையால் நடக்கும் பிரச்சினையை கூறியுள்ளார், அப்போது மறுநாள் வந்து நேரில் பார்ப்பதாக கூறி தாய் சமாதானப்படுத்தியுள்ளார், பின்னர் 26 ஆம் தேதி காலை உண்ணாமலை தனது மகளை செல்போன் மூலமாக பலமுறை தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

இதனால் சந்தேகம் அடைந்த அவர் மதியம் திருக்கனூர் பகுதியில் உள்ள தனது மூத்த மகள் சரண்யாவை போய் மோனிகாவை வீட்டில் பார்க்க கூறி உள்ளார். அவர் சென்று பார்த்த போது கதவு உள்பக்கம் தாழிடப்பட்டு இருந்தது ஜன்னல் வழியாக பார்த்த போது தனது தங்கை கல்யாணப் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இது தொடர்பாக திருக்கனூர் காவல் நிலையத்தில் அளித்த தகவலின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுகாக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்தனர். ஒரு துண்டுச்சீட்டில் தனது சாவுக்கு கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என்றும் குழந்தை இல்லை என்று தன்னை கொடுமைப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டிருருந்தார்

இந்த நிலையில் இரு தினங்கள் கடந்து மோனிகாவின் செல்போனை ஆய்வு செய்த போது, அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக இரண்டு வீடியோக்களை பதிவு செய்து வைத்திருப்பது தெரியவந்தது. அதில் தன்னை தனது கனவர் அரவிந்த் குழந்தை இல்லை என்பதற்காக, தனது தலையில் அடித்ததாகவும் உன்னால் குழந்தை பெற்று தர முடியவில்லை, நான் வேறு திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்று காண்பிக்கிறேன் என்றும், உன் பொருட்கள் அனைத்தையும் எடுத்து கொண்டு செல்லுமாறு கூறி அடித்ததாகவும் கண்ணீர்மல்க கூறி உள்ளார்

இதனால் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் தனது கனவரை சும்மா விட கூடாது என்றும் அக்கா மற்றும் தந்தையை நன்றாக பார்த்து கொள்ளும்படியும் அழுதபடியே தனது தாய்க்கு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த வீடியோ பதிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இந்த வீடியோ ஆதரங்களின் அடிப்படையில் திருக்கனூர் போலீசார் கணவர் அரவிந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,

இதற்கிடையே தனது பேத்தி மோனிகா தற்கொலை செய்து கொண்ட தகவலை அறிந்த அவரது பாட்டி அதிர்ச்சியில் உயிரழந்துவிட்டார், இத்தனைக்கும் உயிரை மாய்த்துக் கொண்ட மோனிகா திருமணம் செய்து கொண்டது தனது தாயின் உடன் பிறந்த அண்ணன் மகனான அரவிந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments