புனேயில் ஆக.1 ம் தேதி பிரதமர் மோடிக்கு லோகமான்ய திலக் விருது..!

0 1163

நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு எதிர்ப்பைத் தெரிவித்து வரும் சூழலில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத்பவார் ஆகஸ்ட் ஒன்றாம் தேதியன்று புனேயில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில்  கலந்துக் கொள்கிறார்.

பிரதமர் மோடிக்கு லோகமான்ய திலக் விருது வழங்கப்பட உள்ள நிலையில், அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சரத்பவார் கலந்துக்கொள்கிறார். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மோடி அரசுக்கு எதிர்க்கட்சியினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் மோடி நிகழ்ச்சியில் சரத்பவார் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments