தெலங்கானாவில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை.. அங்குள்ள மாணவியர் விடுதியை வெள்ளம் சூழ்ந்ததால் கட்டிடத்தின் மீது ஏறி உதவிக்கு காத்திருக்கும் மாணவிகள்

0 1524

தெலங்கானா மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக  வாராங்கல்லில் உள்ள மாணவியர் விடுதியை வெள்ளம்  சூழ்ந்து உள்ளது.

விடுதிக்கு உள்ளே தண்ணீர் புகுந்ததால் அங்கு தங்கி இருந்த மாணவிகளில் சிலர் வெளியேறிவிட்ட நிலையில், சுமார் 280 மாணவிகள் விடுதி கட்டிடத்தில் மீது ஏறி உதவி கேட்டு காத்திருக்கின்றனர்.

தெலங்கானா மாநில பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று மாணவிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments