பி.எம். கிஸான் திட்டத்தின் கீழ் 8.5 கோடி விவசாயிகளுக்கு நிதி.. ரூ.17,000 கோடியை இன்று வழங்குகிறார் பிரதமர் மோடி.. !!

0 1697

பி.எம். கிஸான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான 14வது தவணைத் தொகையை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்.

ராஜஸ்தானின் சீகர் (Sikar) நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில், நாடு முழுவதும் 8 கோடியே 50 லட்சம் விவசாயிகளுக்கு நிதி உதவியாக 17 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குகிறார்.

இந்தத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும். பி.எம். கிஸான் திட்டத்தின் கீழ் இதுவரை வழங்கப்பட்டுள்ள தொகை 2 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவி விவசாயிகளின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் பங்களிக்கும் என்றும் பிரதமர் அலுவலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments