சொத்து பிரச்சனையில் காவல் நிலையத்தில் மகள் புகார் அளித்ததால் தாய் எடுத்த விபரீத முடிவு..!

0 1839

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே, சொத்து பிரச்சனையில் காவல் நிலையத்தில் மகள் புகார் அளித்ததால் தாய் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

கொல்லிக்கோட்டுவிளையை சேர்ந்த லீமாராணியிடம் வீட்டை தனது பெயருக்கு எழுதி தருமாறும், அதிக நகை தர வேண்டும் எனவும் அவரது மகள் ஷாம்லி கேட்டதாகவும் அதற்கு லீமாராணி மறுத்ததால் அவர் மீது திருவட்டார் காவல்நிலையத்தில் ஷாம்லி புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைக்கு காவல்நிலையம் வந்த லீமாராணி, மனவேதனையில் தான் கொண்டு வந்த விஷத்தை அருந்தியதாக சொல்லப்படுகிறது. நாகர்கோயில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments