போதைப் பொருட்கள் வாங்க பணம் தராத ஆத்திரத்தில் தாத்தா, பாட்டியின் கழுத்தறுத்துக் கொலை செய்த பேரன் கைது.. !!

0 2567

கேரளாவில் போதைப் பொருள் வாங்க பணம் தர மறுத்ததால், தாத்தா மற்றும் பாட்டியின் கழுத்தை அறுத்துக் கொன்ற பேரன் கைது செய்யப்பட்டான்.

திருச்சூர் - வடக்கேகாடு என்ற பகுதியைச் சேர்ந்த அக்மல் என்ற அந்த இளைஞனின் தாய் இரண்டாவது திருமணம் செய்துகொண்டு தனியே சென்றுவிட, தனது தாத்தா பாட்டியான அப்துல் - ஜமீலா தம்பதியிடம் வளர்ந்து வந்துள்ளான்.

போதைப் பொருட்களுக்கு அடிமையான அக்மல், பணம் கேட்டு அவ்வப்போது தகராறு செய்வான் என்று கூறப்படுகிறது.

என்றாவது ஒருநாள் உங்களை கொலை கூட செய்யலாம் என அக்கம்பக்கத்தினர் முதிய தம்பதியிடம் எச்சரித்து வந்துள்ளனர்.

ஆனால் 28 ஆண்டுகளாக ஒன்றும் செய்யாதவன், இனிமேலும் செய்ய மாட்டான் என அப்துல் - ஜமீலா தம்பதி நம்பியுள்ளனர்.

இந்த நிலையில்தான், திங்கட்கிழமையன்று பணம் கேட்டு தகராறு செய்தவன், அதனை கொடுக்க மறுத்ததால், தாத்தா பாட்டியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு நகைகளுடன் தலைமறைவாகியுள்ளான். தீவிர தேடலுக்குப் பிறகு போலீசார் அக்மலை கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments