கிரீசில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி, துணை விமானி உயிரிழப்பு..!!

0 2301

கிரீசில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் இரு விமானிகள் உயிரிழந்தனர்.

எவியா தீவில் பற்றி எரிந்த காட்டுத் தீயைக் கட்டுப்படுத்து பணியில் கனடா ஏர் நிறுவனத்தின் CL-215 ரக விமானம் ஈடுபட்டிருந்தது.

இதற்காக அருகில் இருந்த நீர் நிலையில் இருந்து தண்ணீரை எடுத்து நெருப்பை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது.

நேற்றும் அதே போன்று செயலில் இருக்கும் போது, கட்டுப்பாட்டினை இழந்த விமானம் மலைப்பகுதியில் விழுந்து வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் விமானியும், துணை விமானியும் உயிரிழந்ததாக கனடா அரசு தெரிவித்துள்ளது. விமானிகளின் இழப்பிற்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments