லேகியம் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் எனக்கூறி பணம் பறிப்பு.. போலி சித்த மருத்துவர் உட்பட 2 பேர் கைது.. !!

0 1839

லேகியம் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்குமெனக் கூறி பணம் பறித்த போலி சித்த மருத்துவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஒட்டப்பிடாரம் அருகே மளிகைக்கடை நடத்தி வரும் முத்துகுமார் என்பவருக்கு, திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லை என கூறப்படுகிறது.

இதனால், தூத்துக்குடியில் தனியார் சித்த மருத்துவமனை நடத்தி வரும் முத்துக்குமார் என்பவரிடம் ஒவ்வொரு முறையும் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து லேகியம் வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், 10 ஆயிரம் ரூபாய்க்கு தன்னிடம் சிறப்பு மருந்து இருப்பதாக கூறி மளிகைக் கடைக்காரரை புதியம்புத்தூர் பகுதிக்கு வரவழைத்த முத்துக்குமார், தனது நண்பருடன் காரில் வந்து, கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரில் முத்துக்குமாரையும் அவரது நண்பரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், முத்துக்குமார் 12ம் வகுப்பு படித்துவிட்டு போலியாக சித்த மருத்துவம் பார்த்ததும், குழந்தை பேறு இல்லாத ஆண்களை குறிவைத்து பணப் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments