ஷாந்தன் கிரேட் புத்தர் ஆலயத்தில் தீ விபத்து.... 115 அடி உயர பிரம்மாண்ட புத்தர் சிலையின் ஒருபகுதி சேதம்...!

0 2298

சீனாவின் கன்சு மாகாணம் ஷாந்தன் கவுண்டியில் உள்ள பவுத்த ஆலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 115 அடி உயர பிரம்மாண்ட புத்தர் சிலை சேதம் அடைந்தது.

கி.பி. 425-ம் ஆண்டு காலத்தை சேர்ந்த சிலை ஒன்றை பார்த்து இந்த புத்தர் சிலை செய்யப்பட்டதாகவும், சிலையின் ஒரு பகுதி மட்டுமே தீயில் சேதம் அடைந்துள்ளதாகவும், எஞ்சிய பகுதி அப்படியே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் கட்டமைப்புகள் தீயில் அழிந்துவிட்டதாகவும், ஆனால் ஆலயத்தின் கலாச்சார நினைவுச்சின்னங்கள் சேதமடையாமல் இருப்பதாகவும் உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தீ விபத்தில் உயிர் சேதம் இல்லை என்றும், விபத்துக்காண காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments