மணிப்பூர் வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலளிக்க வலியுறுத்தி விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

0 1318

மணிப்பூர் வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலளிக்க வலியுறுத்தி மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மணிப்பூர் விவகாரத்தால், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடர்ந்து முடங்கிவருகிறது. கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான நேற்று, மணிப்பூர் கொடூரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் பேச வேண்டும் என்று மாநிலங்களவையில் தொடர்ந்து முழக்கமிட்ட ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை, இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்வதாக அவை தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று போராட்டத்தை தொடங்கிய மாநிலங்களவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள், இடைவிடாமல் இன்றும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments