காலிஸ்தான் பிரிவினைவாதிகள் 9 பேர் மீது என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல்

0 1413

காலிஸ்தான் பிரிவினைவாதிகள் 9 பேர் மீது தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இதில் காலிஸ்தான் இயக்கங்களுக்கு நிதித் திரட்டுவதற்கான முயற்சிகள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.பயங்கரவாத அமைப்பினர், போதைப் பொருள் கடத்தல்காரர்கள், ரவுடிகள் இடையிலான தொடர்புகள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரிண்டா, அர்ஷ், லாண்டா ஆகிய மூன்று பேர் மீதான குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளின் தொடர்புகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதே போன்று வெளிநாட்டைச் சேர்ந்த 6 பேர் மீதான குற்றப்பத்திரிகையில் இந்தியாவில் உள்ள கூட்டாளிகளைப் பயன்படுத்தி ஆள்கடத்தல், பயங்கரவாதம், ஆயுதக்கடத்தல், போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments