மகாராஷ்ட்ரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்பு முயற்சிகள் நிறுத்தம்

0 1280

மகாராஷ்ட்ரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 நாட்களாக நீடித்த மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன.

27 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 78 பேரை காணவில்லை.மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் நேற்று நடத்திய ஆலோசனையை அடுத்து தங்கள் நடவடிக்கையை அவர்கள் நிறுத்திக் கொண்டனர்.

மீட்கப்பட்ட உடல்கள் அழுகிப்போன நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.இடிபாடுகளில் சிக்கிய உடல்களிலும் துர்நாற்றம் வீசியது. இதனால் மீட்பு முயற்சிகள் கைவிடப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments