தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்காக வெல்டிங் பட்டறை உரிமையாளரை கடத்தி சித்ரவதை செய்த தி.மு.க நிர்வாகி...!

0 1997

திண்டிவனம் அருகே, தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்காக வெல்டிங் பட்டறை உரிமையாளரை கடத்தி சித்ரவதை செய்ததாக தி.மு.க நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்குணம் பகுதியை சேர்ந்த வேணு தனது வெல்டிங் பட்டறையை விரிவாக்கம் செய்வதற்காக திண்டிவனத்திலுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 40 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதில், 15 லட்சம் ரூபாயை கட்டிவிட்டதாகவும், மீதி பணத்தை கட்ட அவகாசம் கேட்டிருந்ததாகவும் தெரிகிறது.

இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த திருவக்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான பாஸ்கர், வேணுவை அழைத்ததாக கூறப்படுகிறது.

அங்குச் சென்ற அவரை காரில் கடத்தி மாத்தூரில் ஒரு வீட்டில் 3 நாட்களாக அடைத்து  வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் செல்போன் மூலமாக மனைவிக்கு அளித்த தகவல் மூலமாக வேணுவை போலீஸார் மீட்டுள்ளனர்.

இதுகுறித்து, வேணு அளித்த புகாரின் பேரில் பாஸ்கர் உள்பட 4 பேர் மீது கிளியனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments