அடுக்குமாடி குடியிருப்பு காவலாளியை சரமாரியாக தாக்கிய வழக்கில் ஸ்விகி ஊழியர்கள் 2 பேர் கைது....!

0 2814

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளியை தாக்கிய வழக்கில் ஸ்விகி ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குரோம்பேட்டையைச் சேர்ந்த மெர்லின்ஜோஸ் பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

நேற்றிரவு உணவு டெலிவரி செய்வதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஸ்விகி ஊழியர்கள் நுழைவு பகுதியில் எந்த அனுமதியும் பெறாமல் மற்றொரு வாகனத்தை பின்தொடர்ந்து வேகமாகச் சென்றதாக கூறப்படுகிறது.

வெளியே வரும் போது அவர்களை மெர்லின் ஜோஸ் தடுத்ததாகவும், அப்போது அவரை இருவரும் சேர்ந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

சிசிடிவி காட்சிகளை  கைப்பற்றி வழக்குப்பதிவு செய்த பல்லாவரம் போலீஸார் அதேப் பகுதியை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ், ஆதவன் ஆகியோரை கைது செய்தனர்.

இதில் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஆதவன் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட  வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments