40 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 3 வயது குழந்தை.. மீட்கும் பணி தீவிரம்.. !!

0 1733

பீகார் மாநிலம் நாளந்தாவில் உள்ள குல் கிராமத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

காலை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை அருகிலிருந்த 40 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிநவீன கேமரா பொருத்தப்பட்ட உபகரணங்கள் உதவியுடன் குழந்தையை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், குழந்தையின் குரலை கேட்க முடிவதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments