கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறு.. தம்பிக்கு பதிலாக அண்ணனுக்கு வெட்டு.. !!

0 1834

புதுச்சேரி வில்லியனூர் அருகே கோவில் திருவிழாவின் போது தகராறில் ஈடுபட்ட இளைஞருக்கு பதிலாக அவரது அண்ணனை எதிரிகள் வெட்டியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

அரசூரில் புத்து மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவின் போது பிரபல ரவுடியான மணி என்ற மாருமணியின் மைத்துனர் சின்ன அய்யப்பனுக்கும் காமேஷ் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியதாக தெரிகிறது.

இதில் காமேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து சின்ன அய்யப்பனை சரமாரியாக தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் வீடு திரும்பிய சின்ன அய்யப்பன், தனது கூட்டாளிகளுடன் சென்று காமேசை கொலைசெய்ய முயன்றுள்ளார்.

அப்போது வீட்டில் உறங்கி கொண்டிருந்தவரை காமேஷ் என நினைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர் காமேசின் சகோதரர் கதிர் என தெரியவரவே கூட்டாளிகளுடன் தப்பி ஓடிய சின்ன அய்யப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments