சிறையில் செந்தில் பாலாஜிக்கு வசந்த மாளிகை போல வசதி செய்து தரப்பட்டுள்ளது : ஜெயகுமார்

0 1848

செந்தில் பாலாஜிக்கு புழல் சிறைச்சாலையில் வசந்த மாளிகை போன்ற வசதிகள் செய்து தரப்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் டி ஜெயகுமார் கூறியுள்ளார்.

சென்னையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் வரிப்பணத்தில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி ஏன் தொடர வேண்டும் என்று வினவியுள்ளார்.

அனைத்து மகளிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துவிட்டு, தற்போது ஆயிரம் ரூபாய் வழங்க அரசு ஆயிரம் நிபந்தனைகள் விதிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். டோக்கன் விநியோகத்தில் தி.மு.க.வினரின் தலையீடு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, மதுரையில் வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெறும் அ.தி.மு.க மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் பொன்னையன் தலைமையில் நடைபெற்றது. அதில் ஜெயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments