இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அரசு பேருந்தை வழிமறித்து நடத்துனர் மீது தாக்குதல்..!

0 2446

மயிலாடுதுறையில் இரு சக்கர வாகனத்தில் வந்த 2பேர் அரசு பேருந்தை வழிமறித்து நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

மன்னம்பந்தலில் உள்ள கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு நேற்று மாலையில் மயிலாடுதுறைக்கு சிறப்பு பேருந்து ஒன்று வந்துள்ளது.

அந்த பேருந்தில் படியில் தொங்கிக் கொண்டு பயணம் செய்த மாணவர்களில் ஒருவர்  தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து சென்ற பேருந்தினை இரு சக்கர வாகனத்தில் வந்த 2பேர் வழிமறித்து நடத்துனர் பிரபாகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி தாக்குதலும் நடத்தியதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments