பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக ராஜஸ்தான் அரசை விமர்சித்த அம்மாநில அமைச்சர் பதவி நீக்கம்..!

0 1544

பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக ராஜஸ்தான் அரசை விமர்சித்த அம்மாநில அமைச்சர் ராஜேந்திர குடா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சட்டசபையில் பேசிய அவர், மணிப்பூர் பிரச்சினையைப் பற்றி விவாதிப்பதற்கு முன் அரசு தனது சொந்த மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பு பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும் என்று ராஜேந்திர குடா வலியுறுத்தினார்.

ராஜஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் அசோக் கெலாட் அமைச்சரின் பதவியைப் பறித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments