ED ரெய்டு குறித்து கேள்வி - அமைச்சர் பொன்முடி சொன்ன பதில்.!

0 3127

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் என, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் துணைவேந்தர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடப்பு கல்வியாண்டு முதலே, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொன்முடி தெரிவித்தார். பிற பாடங்களில் 75 சதவீத பாடத்திட்டங்களை ஒரே மாதிரியாக கடைபிடிக்க வேண்டும் என்றும், 25% பாட திட்டங்களை மட்டும் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம் என்றும் வழிகாட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பில் இறுதியில், ED ரெய்டு குறித்த கேள்வியை முதலில் தவிர்த்தவர், மீண்டும் கேள்வி எழுப்பியபோது, சட்டப்படி சந்திப்போம் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments